Skip to main content

சிந்தனைச் சிதறல் - பேசுவதற்கு நேரமில்லை

பேசுவதற்கு நேரமில்லை என்று தட்டிக் கழிப்பது... 

நம்மிடம் பேசுவதற்கு மனம் இல்லை என்றே பொருள்...!!

பலரது அக்கறை சில்லறை உள்ளவரை... 

சிலரது அக்கறை மட்டுமே கல்லறை சேரும் வரை...!!

மனிதனுக்குள் இருக்கும் வக்கிர புத்தியை காட்டிக் கொடுக்கும் மந்திரக் கண்ணாடிதான் சிசிடிவி கேமரா...!!

நம் கெட்ட வினைதான் நமக்கு செய்வினை... 

நம் குறைதான் நாம் செய்யாத நல் வினை...!!

எலியை துரத்த பூனையை வளா்த்து பாலை இழந்த கதைதான் பெரும்பாலான மனிதனின் மனநிலை...!!

அகிம்சை இல்லை எனில் பலரது  வாழ்க்கை இம்சை ஆகிவிடும்...!!

"பசி" என்று வந்தவாிடம் இல்லை என்று கூறி விரட்டி விட்டு ... 

பின்னா் முன்னோா்கள் வந்து விட்டாா்கள் என்று காக்கைக்கு உணவு வைக்கும் வினோதமான மொட்டை மாடி உலகம் இது...!!

என்று நம் உடல் நலனை கண்டறிய  கருவியின் முடிவுகளை நம்பினோமோ.... அன்றே நாம்  தோற்க தொடங்கி விட்டோம்...!!

அப்பா அம்மா சொன்னதுக்காக அறிமுகமே இல்லாத ஆணிடம் கழுத்தை நீட்டி...  

கடைசி வரைக்கும் நல்லது கெட்டதில் பங்கு பெற்று... 

சாகிற வரைக்கும் அவனோட குப்பை கொட்டுற மனைவி நூறு தாய்க்கு சமம்...!!

மதித்தால் மலராக இரு... 

மிதித்தால் முள்ளாக இரு... 

ரோஜாவின்  கோட்பாடே ராஜாவாக்கும்...!!

கணவன் வீட்டில் சொல்லும் ஆலோசனையை "குறை" என்றும்... 

மனைவி வீட்டில் சொல்லும் குறையை "ஆலோசனை" என்றும்..... 

அழைப்பது தனிக்குடித்தனத்தில் சா்வ சாதாரணம்...!!

பேசாத சிலைகளிடம் பேசி பிச்சை கேட்பவா்கள்தான்... 

பேசும் மனிதா்களை நம்பி கரங்களை நீட்டிக் கேட்கும் இயலாதவா்களை பிச்சைக்காரா்கள் என்கிறாா்கள்....!!

தனிமையின் சுகம்... 

தானே எழுதி தானே ரசித்துக் கொள்வது...  

தனிமையின் சோகம்.... 

தானே அழுது தானே துடைத்துக் கொள்வது...!!

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...