Skip to main content

டிசம்பர் 22 - தேசிய கணித தினம் - கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள்

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*டிசம்பர் 22 - தேசிய கணித தினம் - கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள்*

    உலகமே போற்றி வியந்து பார்க்கும் கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள் இந்தியாவில், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணிதத்தில் பின்தங்கியிருந்த இந்தியாவை தலைநிமிரச் செய்து, உலக அளவில் கணித மேம்பாட்டுக்கு வித்திட்டவர் சீனிவாசா ராமானுஜர்.
                                                                                                                                                                                                                                                                                              1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜர். இந்த நாட்டின் ‘பிரில்லியன்ட் மைண்ட்ஸ்’ என்று கூறப்படும் பிரமிக்க வைக்கும் திறமை கொண்ட நபர்களில் ஸ்ரீனிவாச ராமானுஜருக்கு தனி இடம் உண்டு.
                                                                                                                                                                                    சீனிவாச ராமானுஜரின் வியக்கவைக்கும் கணித அறிவை அனைவரும் தெரிந்து கொள்வதற்காகவும், இளைஞர்களிடையே கணிதம் பற்றிய ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் ராமானுஜரின் பிறந்த தினத்தை தேசிய கணித தினமாக மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ராமானுஜரின் அற்புதமான பணி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு கணிதம் எவ்வளவு முக்கியமாக இருந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.
                                                                                                                                                                                      இந்தக் கணித அறிவு ஜீவி பற்றி நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் பொன்மொழிகள்., பெரிதாக உதவியும் ஆதரவும் இல்லாமல் தன்னுடைய கணிதத் திறனை மேம்படுத்திய ராமானுஜர், 13 வயதிலேயே எந்த உதவியும் இன்றி மிகவும் சிக்கலான Loney’s Trigonometry கணக்குகளுக்கு தீர்வு கண்டார். கணிதத்தில் இவருடைய அறிவைப் பார்த்து, பள்ளியில் இவரிடம் யாருமே பழகவில்லை மற்றும் ஒரு போட்டியாளராகத் தான் நினைத்தனர். எனவே, ராமானுஜருக்கு பள்ளி காலத்தில் நண்பர்களே இல்லை
                                                                                                                                                                                                          கணிதத்தில் மிகச் சிறந்து விளங்கிய ராமானுஜருக்கு மற்ற பாடங்களைப் படிக்க முடியவில்லை. எனவே மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், இவரால் படிப்பை முடித்து டிகிரி பெற முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ‘நாமக்கல்’ என்ற ஒரு இந்து பெண் கடவுள், கனவில் தனக்குக் கணித சூத்திரங்களையும் கேள்விகளையும் கொடுத்து வந்ததாகவும், விழிப்புடன் இருக்கும் போது அதற்குத் தீர்வு கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1918 ஆம் ஆண்டில் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாக கௌரவிக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் இவர்.
                                                                                                                                                                                                             GH ஹார்டி, 1729 எண்ணை மிக மிகச் சாதாரணமான, சுவாரஸ்யமே இல்லாத ஒரு எண்ணாக கூறியிருந்தார். ஆனால் கணிதமேதை ராமானுஜர் அந்த ஏன் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்.
                                                                                                                                                                                                   1729 = 13 + 123 = 93 + 103
“இல்லை. இது மிகவும் சுவாரஸ்யமான எண். இது இரண்டு கியூப் எண்களின் கூட்டலை, இரண்டு விதமாக வெளிப்படுத்தும் போது கிடைக்கும் மிகச்சிறிய எண் ஆகும்” என்று தெரிவித்தார். கணிதத்தில் மட்டுமல்ல, வார்த்தை விளையாட்டிலும் தேர்ந்தவர் என்று ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தினார்.
                                                                                                                                                                                                            இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics. என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் பக்கத்து வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார். அப்பாட புத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டார்.

இவர் மனதிலும், கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச் சதுரங்கள் (magic squares), தொடர் பின்னம் (continued fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (prime and composite numbers), எண் பிரிவினைகள் (number partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (elliptic integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series) மற்றும் உயர்தர கணிதப்பொருள்களுமாகும்.

இராமானுஜன் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ் எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

1914ஆம் ஆண்டுக்கும், 1918ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களில் கண்டுபிடித்த உண்மைகள் இன்று இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை, பல துறை உயர்மட்டங்களில் அடிப்படையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதையாக திகழ்ந்த இவர் 1920ஆம் ஆண்டு தனது 32வது வயதில் மறைந்தார்

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...