Skip to main content

பத்திரப்பதிவு முதல் பழனி முருகன் கோயில் வரை.. இன்று அமலாகும் புதிய சட்டங்கள்

**

 *அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.*

*அக்டோபர் 7ஆம் தேதி முதல் ரூ 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது*

*நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்*

*வெளிநாடு செல்பவர்கள் ரூ 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.*

*வெளிநாட்டு கல்விக்காக ரூ 7 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றால் 0.5 சவீதம் டிசிஎஸ் கட்டணம்*

*மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.*

*டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.*

*பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.*

*பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை*

*அரசு வேலைவாய்ப்புகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.*

*மக்கள்தொகை, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்ப சான்றிதழை பயன்படுத்தலாம்.*

*பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்வது அவசியம்*

*அக்டோபர் 1 முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது; சென்னை குடிநீர் வாரியம்*

*இன்று முதல் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி*

*மணிப்பூரில் இன்று முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்*

*இன்று முதல் 182 ரயில்கள் நேரம் மாற்றம்*

*சிமெண்ட் விலை இன்று முதல் உயர்வு*

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...