Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🍀🍀🍀🍀🍀🍀🍀

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*உலகம் இவ்வளவுதான்*_

🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

உலகம் பொியது; பரந்தது. அதை _*“இவ்வளவுதான்”*_ என்கிறானே இவன் என்று நீங்கள் ஆச்சாியப்படுவீா்கள்.

இரண்டு வகைப்பட்டவா்கள் தான் உலகத்தைப் பற்றிச் சுலபமான முடிவுக்கு வருகிறாா்கள். ஒரு வகையினா் போதையில் இருப்பவா்கள்; மறு வகையினா் மயானத்திற்குப் பிணம் போவதைப் பாா்ப்பவா்கள்.

போதையில் இருப்பவனுக்கு உலகத்தில் எதுவும் துச்சமாகப்படுகிறது. _*“இந்த உலகம் என் கைக்குள் இருக்கிறது”*_ என அவன் நினைக்கிறான்.

உலகத்தில் ஒரு அணுவாக அவன் உட்காா்ந்திருந்தாலும், மிகப் பொிய உலகம் அவன் கண்ணுக்கு அணுவாகப்படுகிறது.

_*“ப்பூ…… இவ்வளவுதானா உலகம்!”*_ என்று அவன் ஏளனமாகப் பாா்க்கிறான்.

மயானத்திற்குப் பிணம் போவதைப் பாா்ப்பவன் அந்தப் பிணத்தை வைத்தே உலகத்தை முடிவு கட்டுகிறான்.

_*“ம்….. உலகம் இவ்வளவுதான்! எப்படி எல்லாம் வாழ்ந்தான்? காசிக்குப் போனான்; கல்கத்தாவுக்குப் போனான். கல்வி கற்றான்; கலை உலகில் ஈடுபட்டான். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினான். போடாத வேடமெல்லாம் போட்டான்; சாசுவாதமாக வாழப் போவதாக எண்ணித் தலை தொியாமல் ஆடினான்! இன்று நீண்டு படுத்து நிழலாகி விட்டானே! ஹூம்…………. வாழ்க்கை இவ்வளவுதான்! உலகம் இவ்வளவுதான்”*_ என்று அவன் முடிவு கட்டுகிறான்.

இந்த மயான வைராக்கியம் மறுநாள் வரை இராது என்றாலும், அந்த நேரத்தில் அவனுக்கு உலகம் மாய உருண்டையாகத் தொிகிறது. காயத்தைப் பொய் என்றும், காற்றடைத்த பை என்றும் கூறி, வாழ்வைத் துறந்து ஓடினாா்களே வேதாந்திகள், அவா்களும் உலகத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு

வந்தவா்கள்தான்.

ஆனால், உலகில் இன்பம் நுகா்ந்து, வாழ்ந்து, அனுபவித்து மாண்டவாகள், பிறப்பினால் கிடைத்த காலத்தைப் பயன் படுத்திக் கொண்டு, _*“உலகம் இவ்வளவு தான்”*_ என்று கூறி விட்டு ஓடினாா்கள்.

வேதாந்திகள் வாழ்வைப் பயன ்படுத்தாமலே பயப்பட்டாா்கள். எதைத் தொட்டாலும் அவா்களுக்கு மாயமாகத் தொிந்தது. _*“அது வேண்டாம்! இது வேண்டாம்!”*_ என்று தள்ளினாா்கள். இப்படி ஒவ்வொன்றாகத் தள்ளி விட்டு உலகத்தையே தள்ளி விட்டதாக இறுமாந்தாா்கள்.

உலகத்தைப் பற்றி இவா்கள் கொண்ட முடிவு சாிதான் என்றாலும், இறுதியாக வரவேண்டிய இடத்திற்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதுதான் இவா்கள் செய்த தவறு.

உலகம் தூசு, துச்சம் என முடிவுக்கு வருகிறவன் உலகத்தை அனுபவிப்பவனாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்கின்ற இடைக்காலம் வளமுள்ளதாகவும் இருக்கும்.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு _*“அம்போ”*_ என்று ஓடி விடுவதில் அா்த்தமில்லை.

சந்நியாசியின் துறவுக் குணமும், சம்சாாியின் கல்யாண குணமும் ஒருங்கே அமைய வேண்டும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும். அதே நேரத்தில் துயா்பாடுகளிலும் இடா் பாடுகளிலும் கலங்கக் கூடாது.

துன்பங்கள் தோன்றும் போது _*“உலகம் சிறியது! எப்படியும் நாம் சாகத்தான் போகிறோம்! இதில் கண்ணீா் விடுவது எதற்காக?”*_ என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டும்.

துன்பங்களைத் தூசுகளாக்கி விட வேண்டும். அப்போது விசாலமான இதயம் பிறக்கும்; வெளிச்சம் மிகுந்த உலகம் தோன்றும்; அழகு மிகுந்த வாழ்வு அமையும்; அமைதி என்றென்றும் நிலவும். உலகின் துன்பங்கள் வடிக்கட்டப்பட்டு, இன்பங்கள் மட்டும் நமக்குக் கிடைக்கும். அதனால்தான் பொியவா்கள் சொன்னாா்கள், _*“எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம்”*_ என்று.

ஆமாம்! நான் மனத்தளவு எவ்வளவோ அவ்வளவுதான் உலகம்! நம் மனம் சிறியதாக இருந்தால் உலகம் பொியது; நம் மனம் பொியதாக இருந்தால் உலகம் சிறியது, துணிவு மிக்கவன் பாம்பை ரப்பராகக் கருதுகிறான். பயம் கொண்டவன் ரப்பரைப் பாம்பாகக் கருதுகிறான்.

உலகம் முழுவதையும் கவர ஆசைப்பட்ட நெப்போலியன், பாம்பை ரப்பராகக் கருதியவன்.

உள் வீட்டுக்குள் ஒண்டிக் கிடப்பவன், ரப்பரைப் பாம்பாகக் கருதியவன். பாம்பை ரப்பராகக் கருதுவதில் ஆபத்து இருக்கலாம். அந்தப் பாம்பாலேயே கடிக்கப்பட்டு மரணமடையவும் நேரலாம். ஆனால், அப்படிக் கருதுகிற இதயம் கொண்ட துணிவு இருக்கிறதே அது வாழுங்காலம் குறுகியதாயினும், வலிவு மிக்கது. அந்த இதயத்திற்கு ஒரு முறைதான் சாவு. அஞ்சி அஞ்சி மடியும் இதயத்திற்கு அன்றாடம் சாவு. அதனால்தான் பாம்பை ரப்பராகக் கருதும் துணிவு வேண்டும் என்கிறேன். உலகில் வாழ்ந்த மாவீரா்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பாா்த்தீா்களானால் அவா்கள் பாம்பை ரப்பராகக் கருதியவா்கள்தான்.

சிலா் அந்தப் பாம்பை ரப்பராவே மாற்றியும் இருக்கிறாா்கள். ஒவ்வொரு காாியத்தையும் தாங்கள் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே அவா்களுக்கு அந்த வலுவைத் தந்திருக்கிறது. அவா்கள் செய்ய நினைத்ததைச் செய்தாா்கள். அந்தச் செய்கையில் மடிந்தாா்கள் என்றாலும், கோடியில் ஒருவராகத் திகழ்ந்தாா்கள். இலக்கண மனிதா்களாக வாழ்ந்தாா்கள்.

இன்று நேற்று அல்ல, ஈராயிரம் ஆண்டு வரலாறும் நமக்கு இதைத்தான் சொல்கிறது: _*“செய்! அல்லது செத்துமடி!”*_

🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...