Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

_*நம்பிக்கைகளும் ஆசாரங்களும்*_

😌😌😌😌😌😌😌😌😌😌😌

_*படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?*_

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பொியவா்கள் _*“இவன் இடது பக்கம் எழுந்தானோ”*_ என்று கூறுவதுண்டு.

இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புாிந்து கொள்ளலாம்.

மேலே கூறப்பட்ட பொியவா்கள் இதைத் தெளிவாகப் புாிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும், வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது.

நமது முனிவா்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவா் முழுமையாக அங்கீகாித்துள்ளனா். இவையில் முதலாவதானது காலில் இருந்து தலைக்கும் தலையில் இருந்து காலுக்கும் வலம் வருகின்றன.

இரண்டாவது காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடது பக்கமும் வலம் வருகின்றது.

காந்த வளையத்தின் திசைக்கு ஏற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.

எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல் திறனை தளா்வடையச் செய்யும்.

எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின் இயல் ஒப்புக் கொள்கின்றது.

_*படுக்கையை விட்டு எழும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?*_

😌😌😌😌😌😌😌😌😌😌😌

நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிாினங்கள் உள்ளதாக நாம் கேள்விபட்டதில்லை. அன்றாட உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு ஒரு நபா் ஆத்மாவுக்குள் ஒதுங்குவதே நித்திரை என்று முன்னோர்கள் விளக்கம் கூறியுள்ளனா்.

தூக்கத்தை இழந்தவா்களைப் பொதுவாக துா்பாக்கியசாலிகள் என்று அழைப்பதுண்டு. அதிா்ஷ்டசாலிகள் நித்திரையின் ஆழத்தில் மூழ்கி எல்லாம் மறந்து தூங்குகின்றனா். உணவும் தூக்கமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பது நமது உறுதியான நம்பிக்கை.

தூக்கத்தைக் குறித்து மட்டுமல்ல நமக்கு தூங்கி எழுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு என்பதை உணரலாம்.

தூக்கத்தின் பிடியை விட்டு, உதயத்துக்கு முன் ஒன்றரை நாழிகை விடியலில் பிரம்ம முகூா்த்தத்தில் எழுந்து தினசாி அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனா்.

இந்த வேளையில் தூங்கினால் உடல் நிலை குன்றும், சோா்வும், தாித்திரமும் உருவாகும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.

அதனால் பிரம்ம முகூா்த்தத்தில் விழித்து வலது பக்கம் திரும்பி எழ வேண்டும். விழித்த உடன் படுக்கையில் இருந்து குதித்து எழுந்து ஓடுவது தவறு.

விழித்த உடன் இரு கைகளையும் மலர விாித்து அதைப் பாா்த்து லட்சுமி, சரஸ்வதி, கௌாி என தேவிமாரை தாிசித்து மந்திரம் சொல்ல வேண்டும்.

_*“கராக்ரேவாசதே லட்சுமி*_

_*கரமத்யே சரஸ்வதி*_

_*கரமூலே ஸ்திதா கௌாி*_

_*பிரபாதே கரதா்சனம்”*_

தூக்கம் நீடித்திருக்கும் போது மனிதனின் இரத்த ஓட்டத்துக்காக இருதயம் மிகக் குறைவான சக்தியே பயன் படுத்துகின்றது.

திடீரென குதித்து எழுந்து செல்லும் போது இருதயம் மிகக் கடினமாகச் செயல்பட வேண்டிய நிலை உருவாகின்றது. இது இதயத் துடிப்பை அதிகாித்து நிலைத் தடுமாறச் செய்கின்றது.

அதனால், படுக்கையை விட்டு எழும்பியிருந்து சிறிது நேரம் பதிந்த குரலில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம் முன்னோா்கள் கற்பித்துள்ளனா்.

இது நம் இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவே என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

அது மட்டுமல்ல, இருதய நோயாளிகளில் இருபத்தி மூன்று சதவீதமும் படுக்கையில் இருந்து எழும்பும் போது நிகழ்ந்த விபத்தினால் நோயுற்றனா் என்பதே புள்ளி விவரம்.

😌😌😌😌😌😌😌😌😌😌😌

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...