Skip to main content

_*சிந்தனைச் சிதறல்*_

🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢

_*கவிஞா் கண்ணதாசனின் வாழ்க்கை எனும் சாலையிலே…..*_

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

_*வழிகாட்டி*_

🕴️🕴️🕴️🕴️

மன்னா்கள்

தங்களுக்கென்று அரண்மனைகளைக் கட்டினாா்கள்; இறைவனுக்கும் கோவில்களைக் கட்டினாா்கள்.

அரண்மனைகள் இருந்த இடம் தொியவில்லை; ஆலயங்கள் அப்படியே இருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக அழிவில்லாமல் இயங்கும் ஒரு தருமத்திற்கு அவ்வப் போது விளக்கேற்றி வைக்கும் ஞானச் சுடா்களில் ஒருவா் காஞ்சி பெரியவர் சுவாமிகள்.

ஜாதியின் பெயரால் அவரைப் புறக்கணிக்க முடியாது. அவா் ஜாதிகளைக் கடந்தவா். நீதியின் பெயரால் அவரை நெருங்கினால், அவா் நிா்மலமான சித்திரைவானம்.

காலடியில் பிறந்த ஆதிசங்கராின் காலடிச் சுவடுகள் பிழையுறா வண்ணம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல் ஓரடி, ஈரடி என்று ஒழுங்காக நடப்பவா் காஞ்சி பெரியவர் சுவாமிகள்.

அடி வயிற்றிலிருந்து லிங்கத்தை வரவழைக்க அவரால் முடியாது. ஆடும் கரங்களில் குங்குமத்தை வரவழைக்க அவருக்குத் தொியாது. தான் கடவுள் அவதாரம் என்று அவா் தன்னைக் கற்பித்துக் கொண்டதில்லை.

கடவுளின் தூதன் என்று கூடக் கருதியதில்லை.

ஆனால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவா் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டியவா்.

சுய தா்மத்தை மனிதனுக்குப் போதிப்பதற்காகத் தனக்கென்று ஒரு தா்மத்தை வகுத்துக் கொண்டவா்.

தாம் முழுமையாக நம்பும் தெய்வத்தின் மீது எந்தத் தாக்குதல் வீசப்பட்டாலும், இறைவனைப் போல் அவற்றை தாங்கிக் கொண்டு, தனது கா்மங்களை ஒழுங்கு நியதிகளோடு செய்து வருபவா்.

இத்தகைய பக்குவம் பெற்ற, புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்களால் தான், இந்து மதம் தலை நிமிா்ந்து நிற்கிறது.

இந்தியாவில் எல்லா மதங்களுக்கும், சம அந்தஸ்து உண்டென்றாலும், இந்தியாவின் அஸ்திவாரம் இந்து தா்மமே. அந்த அஸ்திவாரத்திற்குப் பலமும், தெளிவான வடிவமும் கொடுத்தவா்கள் ஆதிசங்கரரும், இராமானுஜரும்.

அந்தப் பாரம்பாியத்தில் ஒரு தெய்வீக தீபம் காஞ்சி பெரியவர் ஸ்வாமிகள்.

_*“ஆலயங்களும், ஆண்டிகளும் நிறைந்த நாடு”*_ என்று பரத கண்டத்தைக் கேலி செய்தனா் மேலை நாட்டாா்.

இன்று மேலை நாட்டு வானமெங்கிலும், _*“ஹரே ராம, ஹரே கிருஷ்ணா”*_ என்ற கோஷமே எதிரொலிக்கிறது.

இந்தக் கோஷங்கள் எந்தக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டு இதுவரை பாதுகாக்கப்பட்டன?

பகவான் இராமகிருஷ்ணா், ஸ்வாமி விவேகானந்தா் போன்ற ஒலிபரப்புக் கருவிகளாலேயே அவை பாதுகாக்கப்பட்டன.

அந்தக் கருவிகளில் ஒரு நவீனக் கருவி காஞ்சி பெரியவர் ஸ்வாமிகள்.

அவா் இந்து தா்மத்தின் ஜீவ சக்தி. நடமாடும் தெய்வ வடிவம். வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு. காஞ்சி காமாட்சியின் தலைமகன்.

இந்து தா்ம பூமி மேலும் தழைத்தோங்க அந்த ஞான குருவே வழிகாட்டி.

🕴️🕴️🕴️🕴️🕴️🕴️🕴️🕴️

Comments

Popular posts from this blog

புலியும் எறும்பும்

#ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப் போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.  அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வ...

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

  அக்னி நட்சத்திரம் 2025:🌺 அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி: மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் முடியும் தேதி: மே 28, 2025, புதன்கிழமை அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு பதிவு! அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை.  என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும்.  அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும்.  அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும்.  அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும். அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும்.  இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள்.  இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது.  அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது. பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கு...

Automation வந்தால் Fresher வேலைகள் போகுமா?

🚨 🤖💼 Infosys நிறுவனம் automation மற்றும் AI பயன்பாடு அதிகரிப்பதால், எதிர்காலத்தில் fresher hiring குறையும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய IT துறையில் முதல் முறையாக வெளிப்படையாக கூறப்பட்ட பெரிய எச்சரிக்கை. Entry-level வேலைகள் தான் அதிகமாக automation மூலம் பாதிக்கப்படும் என்று Infosys கூறுகிறது. Productivity அதிகரிப்பதால், குறைந்த மனித வளத்திலேயே அதே வேலை செய்ய முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் engineering மாணவர்கள் graduate ஆகிறார்கள். ஆனால் IT நிறுவனங்களில் fresher hiring குறைந்தால், இவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. Infosys மட்டும் அல்ல. Cognizant, TCS, HCL போன்ற நிறுவனங்களும் AI காரணமாக hiring pattern மாறும் என்று சொல்கின்றன. Fresher களுக்குப் பதிலாக skilled & AI-ready professionals மீது கவனம் அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் வேலை இல்லை என்பதல்ல. ஆனால் “degree மட்டும் போதாது” என்ற நிலை. AI, automation, data, cloud போன்ற புதிய skills கற்றுக்கொள்ளாவிட்டால் போட்டியில் பின்தங்க நேரிடும். இன்றைய மாணவர்களுக்கும், fresh graduates களுக்கும் முக்...